Saturday, September 20, 2008

கவிதை

தமிழ்

தமிழ் பேசு தங்க காசு
எங்கோ கேட்டேன்
தாய்ப் பால் கொடு தங்க காசு
எங்கோ கேட்பேன்
தாய்ப் பால் குடித்தால் செழுமை பெறும் உங்க‌ள் குழ‌ந்தை
தாய் மொழிப் பால் குடித்தால்செழுமை பெறும் உங்க‌ள் எண்ணக் குழ‌ந்தை இன்னும் போக‌வில்லை
எங்க‌ளுக்கு அந்த அடிமைப் புத்தி
அன்று ஆங்கிலேய‌னுக்கு
இன்று ஆங்கில‌த்திற்க்கு
ஆங்கில‌த்தைக் கொல்ல‌ மாட்டோம்
ஏனென்றால் எங்க‌ளுக்கு அது சோறு போடுகின்ற‌து
தாயில்லாம‌ல் த‌னியே நிற்க்கும் ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைப் போல‌
த‌னியே த‌விப்ப‌து தாய் மொழி த‌மிழ் தானே
அத‌னால் கொல்லுகின்றோம் த‌மிழை ஆங்கில‌ம் எனும் ந‌ஞ்சு க‌ல‌ந்து
த‌வ‌றில்லை ஆங்கில‌ம் பேசுவ‌து
அதே போல‌த் தான் த‌வ‌றேதுமில்லை
பிற‌ மொழிக் க‌ல‌ப்பின்றி த‌மிழ் பேசுவ‌தும்
என்னுடைய‌ முய‌ற்சியை தொட‌ங்கிவிட்டேன்
நீங்க‌ள் எப்போது ?

தோழ‌மையுட‌ன்
ப.ல.வெங்க‌டேச‌ன்

No comments: