தமிழ்
தமிழ் பேசு தங்க காசு
எங்கோ கேட்டேன்
தாய்ப் பால் கொடு தங்க காசு
எங்கோ கேட்பேன்
தாய்ப் பால் குடித்தால் செழுமை பெறும் உங்கள் குழந்தை
தாய் மொழிப் பால் குடித்தால்செழுமை பெறும் உங்கள் எண்ணக் குழந்தை இன்னும் போகவில்லை
எங்களுக்கு அந்த அடிமைப் புத்தி
அன்று ஆங்கிலேயனுக்கு
இன்று ஆங்கிலத்திற்க்கு
ஆங்கிலத்தைக் கொல்ல மாட்டோம்
ஏனென்றால் எங்களுக்கு அது சோறு போடுகின்றது
தாயில்லாமல் தனியே நிற்க்கும் ஆதரவற்ற குழந்தைப் போல
தனியே தவிப்பது தாய் மொழி தமிழ் தானே
அதனால் கொல்லுகின்றோம் தமிழை ஆங்கிலம் எனும் நஞ்சு கலந்து
தவறில்லை ஆங்கிலம் பேசுவது
அதே போலத் தான் தவறேதுமில்லை
பிற மொழிக் கலப்பின்றி தமிழ் பேசுவதும்
என்னுடைய முயற்சியை தொடங்கிவிட்டேன்
நீங்கள் எப்போது ?
தோழமையுடன்
ப.ல.வெங்கடேசன்
Saturday, September 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment