Monday, September 22, 2008

முரண்களின் முத்தங்கள்
சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதி சொன்னாராம்..
சாதிச் சான்றிதழ் (கண்டிப்பா) வேண்டுமடி பாப்பா(ஆசிரியர் சொன்னார்)

எல்லா மதமும் அன்பை போதிக்குதுன்னு சொன்னாங்க பாப்பா
ஆனால் இங்க எல்லொரும் அன்பை விட்டுட்டு வெறும் மதத்தை மட்டும் போதிக்குறாங்களே பாப்பா

எல்லா கட்சியும்(மனிதர்களும்) பெண்ணுரிமையப் பத்தி வாய் கிழிய பேசுவாங்க பாப்பா..
ஆனா இங்க 33%க்கே முக்க வேண்டி இருக்கே பாப்பா (நாட்டிலையும் சரி வீட்டிலையும் சரி இங்க ரெண்டும் ஒன்னு தான் பாப்பா) .

நல்ல அரசியல் வேண்டும்னு சொல்லுவாங்க பாப்பா
ஆனா இவங்க மட்டும் அரசியலுக்கு வரவே மாட்டங்க பாப்பா..
(நடுத் தர வர்க்கம் - இலவசம்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அந்த கட்சியை செயிக்க வச்சிரும்)

விவசாயக் கடன் தள்ளுபடி ஆச்சு பாப்பா பட்செட்டுலகூடவ சேந்து இலவசமா விவசாயியும் தள்ளுபடி ஆகுதே பாப்பா நெசத்துல

கல்-வின்றது உள்ளிருப்பதை வெளிக் கொண்ர்தலாம் பாப்பா.பைத்தியக்காரனுங்க ..
நாம வெளியிப்பதை உள்ள தள்ளுறது தான் சரி பாப்பா.

அம்மா .. அப்பா.. கண்டிப்பா வேணும் பாப்பா...
அப்ப தான கருணை இல்லம் , முதியோர் இல்லம் எல்லாம் சிறப்பா செயல் படும்..
இவங்க இல்லைன்னா இது எல்லாம் முடங்கிடாது..
என்ன பாப்பா சரி தான..

தேசிய நதி நீர் இணைப்ப பத்தி நல்லா பேசுனோம் பாப்பா..
என் பாப்பா நேத்து நீ பக்கத்து வீட்டுக்காரனுக்கு தண்ணி குடுக்கலை தான..
நீ செய்தது ரொம்ப சரி தான் பாப்பா..

கடைசியா ஒன்னே ஒன்னு பாப்பா
வேற்றுமையில் ஒற்றுமைன்னு இந்தியாவ பத்தி எங்கயோ கேட்டே பாப்பா
இப்ப தான் இந்த நாயிக்கு புரியுது .. இந்தியா வேற்றுமையில் மட்டும் தான் (கண்டிப்பா) ஒற்றுமைன்னு பாப்பா..

முரணாய் ஆயிட்டேனே பாப்பாஇந்த வெங்கடேசன் பழநி....

No comments: