என் அம்மா
என்னுயிர் தான் வெளி வரவே
உன்னுயிர் நோக துடித்தவள் நீ...(இன்னுயிரை துறந்தவர் பலர்)
உன்னுதிரம் தான் திரித்து
எனக்கமுது அளித்தவள் நீ....
உனக்கான உன் உணர்வை
எனக்காக அழித்தவள் நீ.....
எனக்கொன்று என்றாலும்
அதுதனக்கென்று துடித்தவள் நீ...
என் வாழ்வை நான் வாழ
ஊணுறக்கம் பாராமல் உன் வாழ்வைது(ம)றந்தவள் நீ...
விதை எனவே இருந்த என்னைவிருச்சமாக்கி விட்டவள் நீ...
உன் கரம் தான் எப்பொழுதும்
அது எனைக் காக்க காத்திருக்கும்...
உன் முகம் தான் எப்பொழுதும்
அது என் அகம் தான் காட்டிடுமே...
உன் மகிழ்ச்சி எப்பொழுதும்
அது என் மகிழ்ச்சி ஒன்று தானே....
அம்மா என்ற ஒற்றைச் சொல்லே
உனக்கெல்லாமுமாய் ஆனதுவே.....
ப.லட்சுமியின் மகனான வெங்கடேசன் .
என் அம்மாவிற்க்கு ஒரு சிறு காணிக்கையாக இந்த கவிதையை சமர்ப்பிக்கின்றேன்
Saturday, September 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment